நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

3/12/09

கவிதைகளைக் காணwww.mallaithamizhachi.blogspot.com

வானவில் உதிர்த்த வண்ண வண்ண பூக்கள் வண்ணத்துப் பூச்சிகள்
*******
தற்கொலைக்கு முயன்றால் கிணற்றுக்குள் எனக்கு முன் நீயுமா நிலாவே..?
********
வியர்த்தது விட்டில் பூச்சிமரண பயமல்ல..,மானுட பயம்.
*********
தலை கனக்க பூ வைத்திருக்கிறாள் விதவை ,பூக்கூடையில்.
*********
கடவுள் கையில் ஆயுதம்,பயம் யாரிடம்.?
********
வயல்காட்டிலும் நாகரீகம் பேண்ட் சட்டையுடன் சோளக்கொல்லை பொம்மை.
********
வெயிலில் ஆடு மேய்த்துபுழுங்கிய சிறுவனுக்கு ,குடைபிடித்தது பனை.
*********
மண்ணில் வீழ்ந்தால் மாயும் உருவென்று,தும்பை மேல் தூங்கும் பனி.
**********
விண்ணுக்கும் ம்ண்ணுக்கும் காதல் தூது,மழை.
**********
தொலைந்து போனேன் தேடி வந்தது,வானத்து நிலா.
*********
-- அன்புடன்மல்லை.தமிழச்சி.
இனியொரு தமிழ் செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.
கவிதைகளைக் காணwww.mallaithamizhachi.blogspot.com

0 Comments: