3/12/09
வாழ்க்கை!ஒவ்வொருவர்க்கும் ஓர் விதமாய் தென்படும்!.
பலகணி வழியே பார்ப்பவர்க்கோ அதுசிதறிக்கிடக்கும் ஒளிச் சில்லாய்!இருளின் ஊடே உற்றுப்பார்ப்பவர்க்கோபயம் காட்டும் நீள் நெடும் நிழலாய்!பயம் கண்டு ஓடுபவர்க்கோ பின் தொடரும் நிழலாய்!உப்பரிகையில் நின்று காண்பவர்க்கோஅனைத்தும் சிறு பொம்மையாய்!அண்ணாந்து ஏங்கி பார்ப்பவர்க்கோஅனைத்துமே தோன்றும் பிரம்மாண்டமாய்!நடந்து செல்பவர்க்கோ தன்னுடன்நடை பயிலும் நல்ல நட்பாய்!புறக்கண் கொண்டு பார்ப்பவர்க்குபுரியாத புதிராய்த் தென்படும்!அகக்கண் கொண்டு பார்ப்பவரேஅறியக்கூடும் அந்த ரகசியம்!யதோ திருஷ்டி ததோ மனயதோ மன ததோ பாவயதோ பாவ ததோ வாழ்க்கை.பாகம்பிரியாள்.
0 Comments:
Post a Comment