நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

கழுவி செல்லும் மழை

3/12/09

கழுவிச் செல்லும் மழை.
கழுகுகளின் மாமிச அலகுகளையும் அன்று பிறந்த அதன் குஞ்சுகளையும் காய்ந்த சுள்ளிகளின் திறந்த வெளி வீட்டையும் கழுவி செல்லும் மழை.
ஆடையுதிர்த்த மரங்களின் சருகுகளை தன் அமானுஷ்ய விரல்களால் களைந்து காற்றிலடித்து மரங்களின் முண்டுகள் தடவிவழிந்தோடியது மழை
வானைத் துளாவிய ஒற்றடை குச்சிகளின் நுனிகளெங்கும் ஒரே இரவில் பச்சை துளிர்களின் மருதாணிப் பதியல்.
மழைப் புள்ளிகளின் முத்த மழையில் ஆண்டுகளின் அழுக்கு கழுவப்பட்டு வீதியெங்கும் காலடி கோலங்கள்.
குழைய குழைய செம்மண்ணோடு மேகமழையில் சர்க்கரை பாகு.
கல்லுக்குள் புதைந்த தேரைகளின் காட்டில் மழை கல்யாண களையோடு இரவெல்லாம் கச்சேரி.
ஓடி வந்த நீருக்கு வீட்டைதந்து விட்டு திண்னையில் ஒண்டியிருக்கும்..நானும் என் கவிதையும்

-- அன்புடன் தயானிதாயுமானவன்
கணினியை தமிழ்மயமாக்க (www.free.azhagi.com)
என் படைப்புகளின் முகவரிwww.dhayanithaayumaanavan.blogspot.com

0 Comments: