நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

பொதுவில் வைப்போம் -- கவிதை

3/12/09

பெண் பார்க்கும் அவலம் போய் ஆண் பார்க்கும் படலம் வேண்டும்
போய் கடிதம் போடாமல் நேரில் சொல்லவும் வேண்டும் நெஞ்சுரம்.
பொதுவில் வைப்போம் இரு வீட்டார்க்கும் புலம்பலை.
பெண்ணுக்கு மூன்று முடிச்சு எனில்.,ஆணுக்கும் போடட்டும் ஒன்றேனும் சூடு.
ஆண் நடக்கையில் மெட்டி ஒலி இசைக்கட்டும்.
ஆணுக்கும் அதுவே இருக்கட்டும் முதலிரவாய்.
காலில் விழாமல் கை குலுக்கி அரவணைப்போம்.
கனிவு பேச்சு கட்டளை அதட்டல் மிடுக்கான மிரட்டல் அனுதாப பாராட்டல் இத்தனையும் இருக்கட்டும் இருவர்க்கும் பொதுவாய்
.

ஆனாலும்..கருத்தரிப்பும் பிரசவிப்பும் பெண்ணுக்கே நிலைக்கட்டும்.
தாய்மையின் பெருமையை தரவும் முடியாது அதை நீ பெறவும் முடியாது ஆண் மகனே.-- அன்புடன்மல்லை.தமிழச்சி.
இனியொரு தமிழ் செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.
என் கவிதைகளைக் காணwww.mallaithamizhachi.blogspot.com

0 Comments: