நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

ஆன்மீகம் என்று ஒரு கட்டுரை

3/12/09

“ஆன்மீகம்”
ஆன்மீகம் என்று ஒரு கட்டுரை எழுதலாம் என்றுயோசித்துக்கொண்டிருந்தேன் ,அதற்கு எனக்குத் தூண்டுகோலாயிருந்ததுஉண்மையில் எது முக்கியம்.? விளங்க முடியாக் கடவுளா? அல்லது சக மனிதனாஎன்கிற வினா,இந்த வினா என்னை மிகவும் சிந்திக்க வைத்தது..என் மனதிற்குநியாயம் என்று தோன்றியதை எனக்குத் தெரிந்த வரையில் எழுதி இருக்கிறேன்,
எம்மதமாயிருந்தாலும் சம்மதம் ”மனிதம்” தான் முக்கியம் என்னும் உயரியநோக்கோடு நாம் எல்லோரும் முழு மனதோடு கூடி " மனிதம் " என்னும் ஒரேகொள்கையோடு முயற்ச்சி செய்வோம், நிச்சயமாய்ப் புரிந்து கொள்வோம்,”மனிதம்” தான் ஆன்மீகத்தின் ஆணி வேர் என்னும் உயரிய தத்துவத்தைநாம் புறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால்,புறிந்து கொள்ளப்படவேண்டிய விஷயம் கடவுளைப் பற்றியதாக இருந்தாலும், சக மனிதரைப் பற்றியதாகஇருந்தாலும், புறிந்து கொள்ளவேண்டும் என்று உண்மையாக செயல்பட்டால்நிச்சயமாகப் புறிந்து கொள்ள முடியும், புறிந்து கொள்ளக் கூடாது என்றுநினைத்துவிட்டால்,புறிந்தாலும் மனது ஏற்றுக் கொள்ளாது,நாம் புறிந்து கொள்வோம் வாருங்கள்

நான் பொதுவாக எங்கு சென்றாலும் அங்கிருக்கும் மனிதர்களிடத்தில் பொதுவாககேட்பேன் ”யார் உறவுக்காரர்கள்” என்று பலர் பலவிதமாக விளக்கம்சொல்வார்கள், ஆனால் நான் கடைசியாக சொல்வேன் இப்போது இங்கிருக்கும்நாம்தான் உறவுக்காரர்கள், ஏனென்றால் இப்போது இந்தக் கணத்தில் இங்கு என்னநடக்கிறதோ அந்த நடபுக்கேற்ப நனமையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும்முதலில் நமக்கு உதவப் போவது இங்கிருக்கும் நம்மில் ஒருவர்தான், பிறகுதான்மற்ற உறவுக்கோ, நண்பர்களுக்கோ செய்தி அனுப்புவோம்,ஆகவே நாம் தான்உறவுக்காரர்கள் என்று
கடவுள் நம்பிக்கை,உருவ வழிபாடு,அருவ வழிபாடு, மதம், கோவில்,திருவிழா,தேரோட்டம், எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டவை. மனிதனாலேயேவிஸ்தரிக்கப்பட்டவை, அவற்றை மனிதன் தான் செப்பனிட வேண்டுமே தவிர, கடவுள்முக்கியமா மனிதன் முக்கியமா என்று ஆராய்வே அவசியமற்றது என்றுதான்தோன்றுகிறது,ஆனாலும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டால் மனிதம் என்னும்ஆணிவேருக்கு சரியான விளக்கம் என்ன என்பதை அறியலாம் என்னும் முயற்சியால்இக்கட்டுரையை எழுதுகிறேன்
கண்ணுக்கு தெரியாத கடவுளை விட புலனுக்கு தெரியும் மனிதன் முக்கியம்தான்.என்றால் அந்த மனிதன் தன் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்காக கடவுளைவைத்திருக்கிறானே “என்கிற பதில் என்னை ஆன்மீகத்தைப் பற்றி ஓரளவு எழுதலாம்என்று எண்ண வைத்திருக்கிறது, மனிதர் எந்த மதத்தைச் சார்ந்தவராகஇருப்பினும்,உலகிலே நம்மை மீறிய சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்வர்,மேலும் அறிவார்ந்து சிந்திப்பவர்கள், விவரமறிந்துவர்கள்,எப்போதும் நல்லசக்தி ஒன்று,கெட்ட சக்தி ஒன்று ஆக மொத்தம் இரு சக்திகள் உண்டு,கெட்டசக்திகள் நம்மை ஆட்டிவைக்கின்றன என்று ஒப்புக்கொள்வர்கெட்ட சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நாம் இறைவனை(அதாவது)நல்ல சக்தியை தொழுகிறோம் என்று சொல்வார்கள்சக மனிதர்கள் முக்கியம் என்றால், சக மனிதர்களின் உணர்வுகளும்முக்கியமானவைதானே அதனால்தான் சொல்லுகிறேன், திட்டமிட்டு ஒரு கட்டுப்பாட்டோடு செய்யும்போது எதுவுமே சிறக்கிறதுநாம் நம் மனதுக்குப் பிடித்தவற்றை செய்யலாம், தவறில்லை, அடுத்தவர்க்குதுன்பம் தராமல் இருக்க கூடிய கட்டுப்பாடு வேண்டும் அதை விட்டு விட்டுஉண்மையில் எது மிக முக்கியம்? விளங்க முடியா கடவுளா..?அல்லது சக மனிதனா?என்கிற கேள்வியே தேவை இல்லையோ என்று தோன்றுகிறது, விளங்க முடியாத பலவிஷயங்களை விளங்கிக்கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டுமென்றால், நாமெதையுமேசெய்யமுடியாது, சக மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துஅவரவர் மரியாதையை காப்பாற்றி ஆகவேண்டும் அதுதான் ஜனநாயகம், கடவுள்மட்டுமல்ல, மனிதன் கூட விளங்கமுடியாதவன்தான், கட்டுப்பாடு என்பதுஎல்லாவித மனிதரையும்,அவர்களின் உணர்ச்சிகளையும் மதிப்பது என்பதுதான்மனிதம்
அவரவரை அப்பப்படியே ஏற்றுக் கொள்ளும், மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால்தான் மனிதம் வளரும்
அன்புடன்தமிழ்த்தேனீ
ஆன்மீகம் தொடரும்
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en

0 Comments: