நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

பிச்சை பாத்திரம்

3/12/09

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே பிண்டம் எனும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே
அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியில் வல்வினை சூழ்ந்ததா இன்மையை நான் அறியாததா இன்மையை நான் அறியாததா சிறு தொன்மையில் உண்மையை உணர்ந்திட பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே
அத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில் ஒரு முறையா இரு முறையா பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய் புது வினையா பல வினையா கணம் கணம் தினம் என்னை துடிக்க வைத்தாய் பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே உன் அருள் அருள் அருள் என்று அதை நின்று மனம் இங்கு பிதற்றுதே அருள் விழியால் நோக்குவாய் மலர் பதத்தால் தாங்குவாய் உன் திருக்கரம் எனை அரவணைத்துனதருள் பெற
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே பிண்டம் எனும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

0 Comments: