நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

பெண்ணுலகம் ஏன் மனிதராக பிறந்தோமோ

3/12/09

ஏன் மனிதராக பிறந்தோமோ என நாம் எண்ணிப்பார்த்து கலங்குமாறு அவ்வப்போதுசில நிகழ்வுகள் நடப்பதுண்டு..நம் வாழ்வில். இது எத்தனை பேருக்குபொருந்தும்..பொருந்தவில்லை என்பதுபற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால்..இரண்டுநாட்களாய்...மனிதர் எனும் பொதுமை மீறி..ஏன் ஒரு பெண்ணாக ஏன் பிறந்தோம் எனஎன் மனம் துடித்துக்கொண்டிருக்கிறது.
"மாதராய் பிறப்பதற்கு..மாதவம்..செய்திடல்..வேண்டும்.."- பெண்பிறப்புதவமல்ல..பாவம்..பாவம்..!
ஜன்னலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே..வார்டுக்கு வெளியே -செவிலியர்களின்..ஓட்டமும் நடையுமான சத்தமும்.,சக்கரநாற்காலியைமருத்துவமனை பணியாளர்கள் தள்ளி செல்லும் "கட கட" ஓசையும் துல்லியமாய்கேட்கிறது.தன்னை அழைத்து செல்லவும் இப்படி ஒரு சக்கரநாற்காலி இன்னும்சற்று நேரத்தில் வரக்கூடுமென்பதே எனக்குள் கூடுதல் கலவரத்தைஉண்டுபண்ணீயிருக்கிறது.

For more visit http://www.mallaithamizhachi.blogspot.com/

0 Comments: