நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

ஆலயங்கள் அறிவுக் கூடங்களே – 5

3/12/09

For images http://mail.google.com/mail/?ui=2&ik=4f1baacc93&view=att&th=11fc05da1540768c&attid=0.1&disp=vah&realattid=f_frr6iywg0&zwகோவிலின் வெளியேயே கொள்ளை அழகு என்றால் உள்ளே கேட்கவா வேண்டும். உள்ளே போகலாமா?

(http://www.travelblog.org/Photos/21539.html)
உள்ளே பல தூண்கள். இவற்றில் எல்லாம் சிற்ப வேலைப் பாடுகள்.
இந்தத் தூண்கள் மிக அழகான வேலைப் பாடுகள் கொண்டவை. தூண்கள் கூரையோடு சேருமிடத்தில் தேவலோக நடன மங்கையர்களின் உருவங்கள். இவ்வுருவங்கள் அணிந்துள்ள ஆடை ஆபரணங்களின் வகைகளும் அவர்கள் காட்டும் அபிநயங்களும் கண்ணுக்கு விருந்து எனலாம்.

http://www.travelblog.org/Photos/21518.html

என்ன நளினம்? என்ன நுணுக்கம்? இப்படிக் கல்லில் செதுக்க எவ்வளவு திறமை வேண்டும்?
மத யானையை அடக்க வேண்டுமா? அதற்கு எவ்வொளவு ஆட்கள் வேண்டும்? எவ்வளவு பலம் வேண்டும்? என்ன மாதிரியான ஆயுதங்கள் வேண்டும்? தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்தக் காட்சியைப் பாருங்கள்.


(http://www.travelblog.org/Photos/21520.html)
தூண்களின் நடு நாயகமாக விளங்கும் நரசிம்மர் தூண்தான் நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகம் கொண்டது.

நரசிம்மர் தூண்
(http://www.travelblog.org/Photos/21516.html)
ஒரு யானையின் வயிற்றுக் குள்ளே சிவனை தரிசிக்க வேண்டுமா?

(http://www.travelblog.org/Photos/21543.html)
என்ன நுணுக்கம்! என்ன அழகு!
இப்படி ஒவ்வொன்றாக நிதானமாகப் பார்த்துக் கொண்டே வருவதற்குள் மாலைப் பொழுதாகி விடுகிறது.
கூட வந்த சிற்பி திடீரெனப் பாட ஆரம்பிக்கிறார்,
“ஒரு நாள் போதுமா...
இன்றொரு நாள் போதுமா...
நான் பார்க்க இன்றொரு நாள் போதுமா?”
என வித்வான் பால முரளி குரலில்.
ஒரு நாள். அல்ல ஆயுள் பூராவும் பார்த்தால் கூட நம் நாட்டின் கலைப் பொக்கிஷங்களான, அறிவுக் கூடங்களான ஆலயங்களை முற்றிலுமாகப் பார்த்து முடிக்க முடியாது. இப்போது சொல்லுங்கள். ஆலயங்கள் அறிவுக் கூடங்கள்தானே?
நடராஜன் கல்பட்டு
(பின் குறிப்பு:- இந்தக் கட்டுரையில் கொடுக்கப் பட்டுள்ள விஷயங்களோ படங்களோ தஞ்சை, ஸ்ரீரங்கம், பேலூர், ஹலேபீடு கோவில்களில் காணப்படும் ஆயிரம் ஆயிரம் அற்புத விஷயங்களில் ஒன்று என்று கூட சொல்ல முடியாது. அதையும் விடக் குறைவே.)

0 Comments: