நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 4

3/12/09

Full story visit திரு கேஆரெஸ் சிங்கவேள் குன்றத்தின் கதையை எழுதச் சொல்லி இருக்கிறார். கொஞ்சம் பொறுத்துக்குங்க. முதலில் அதை எழுதும் எண்ணம் இல்லை. அனைவரும் அறிந்த கதைதானேன்னு எழுதலை. என்றாலும் மீண்டும் எழுதறேன். இப்போ மாலோல நரசிம்மரைத் தரிசிக்கச் செல்வோமா? இரு மலைகள் ஆன கருடாத்திரி, வேதாத்திரி மலைகளில் அமைந்தவையே நவ நரசிம்மர் சந்நிதிகளும். அவற்றில் வேதாத்திரி மலையில் உள்ளது. இந்த மலைத் தொடர்களை லக்ஷ்மி க்ஷேத்திரம் எனவும் அழைக்கின்றனர். கனகபாயா என அழைக்கப் படும் நதிக்கரையில் உள்ளது இந்த ஆலயம். ஹிரண்யகசிபுவைக் கொன்ற கோபத்தில் இருந்து தணியாத நரசிம்மரின் கோபத்தை அடக்க முடியாமல் தவித்த தேவர்கள், பிரஹலாதனையே வேண்ட அவனும் நரசிம்மத்தின் கோபம் தணியப் பிரார்த்திக்கின்றான். அவனுக்காக எழுந்தருளிய கோலமே இது. கோபம் தணிந்து ஸ்ரீ எனப்படும் அன்னையுடன் எழுந்தருளி இருக்கின்றார் நரசிம்மர். மா= என்பது மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். லோலா=என்றால் காதலன், லோலம்=காதல். அன்னையைக் காதலுடன் தன் இடது தொடையில் இருத்தி செளம்ய ரூபமாய் இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தின் அமர்ந்திருக்கும் ரூபமே மாலோல நரசிம்மர்

0 Comments: