நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை - பின்னதிர்வு-2

3/12/09

நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே > இருக்கிறது// > > //அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை > செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை > ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது// > > அன்புத் தாயுமானவன், > > எனக்கும் சில கேள்விகள். > ஒவ்வொருவருக்கும் ஆற்றல் கிடைக்கும் அளவு வேறுபடுமா? > > 1. இது எண்ணங்களோடு தொடர்பு உடையதா? > 2. நம்க்கு வேண்டுமளவுக்கு பெற முடியுமா? > 3. அதிகம் பெற்றால் தீமையா? > 4. நியூட்டனின் மூன்றாம் விதி உடன்படுமா? > 5. இந்த ஆற்றலின் திறனை நமக்குள் அதிகப்படுத்த முடியுமா? > > அற்புதமான பதிவு. > அதிசயமாய் எனக்கும் கேள்வி கேட்க நேரம்.. > > நன்றி.
முதற்கண் நன்றி தவா., ஆற்றல் கிடைக்கும் அளவில் எந்த வேறுபாடும் கிடையாது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான அள்வில்தான் வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்துவதிலதான் கோளாறு.இயற்கை நமக்கு தந்திருக்கும் நதிகள் அதிகம். அதை பராமரித்து பகிர்ந்துகொள்வதில்தான் பிரச்சினை அல்லவா..? இன்னொருவகையில் சொல்வதானால்-அன்றாடம் நாம் பயன்படுத்தும் மின்சாதன்ப்பொருட்கள் வடிவத்திலும்,தன்மையிலும்,செயல்பாட்டிலும் வேறு வேறானவை.(சுழலும் மின்விசிறி,கொதிக்கும் heater, குளிரும் a/c )ஆனால் குளிர்வதற்கானாலும் சரி. கொதிப்பதற்கானாலும் சரி.நாம் உள்ளீடாக தரும் பொருள் ஒன்றேதான். மின்சாரம். அளவும் ஓரே அளவுதான்.(230 வோல்ட்ஸ்). மின் சலவைபெட்டியோ. தொலைகாட்சி பெட்டியோ அதற்கு தேவையான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுமாறு டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அதுபோல் நாம் என்ன டிசைன் என தீர்மானிக்காதவரை ஆற்றலின் அளவு பற்றி யோசிக்கமுடியாது. திடமாய் இருக்கும் ஒரு வசதியான வீட்டு பையனால்-ஒரு சைக்கிளைக்கூட தள்ள முடியாது.ஆனால்..பிளாட்பாரத்தில் வசிக்கும் ஒரு கூலிக்கார சிறுவன் அனாயசமாய் ஒரு அரிசி மூட்டையை தூக்கிவிடுவதை பார்க்கிறோம். இந்த ஆற்றல் வளர்ச்சி புறம் சார்ந்தது.புற ஆற்றலை தேவைகள் வளர்க்கவோ,குறைக்கவோ செய்யும். ஆனால் நாம் பேசிக்கொண்டிருப்பது அக ஆற்றல் பற்றி. மனதுக்கும் மூச்சுக்கும் தொடர்பு இருக்கிறது.கோபம்,tension,விரக்தி,ஏமாற்றம்,பதற்றம்..போன்ற சமயங்களில் சுவாசத்தின் வேகமும்,இதய துடிப்பும் அதிகரிப்பதை கண்டிருக்கிறோம் அல்லவா..?அதே ஒரு பெருமூச்சு விடும் சமயத்தில் கிடைக்கும் relax ஐயும் நினைத்து பாருங்கள். மூச்சை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நம் அக ஆற்றலை வளர்த்துக்கொள்ளமுடியும். அதற்கான பயிற்சிமுறைகளான யோகா,தியானம், ஆகியவற்றை மதங்களோடும்,கடவுளோடும் தொடர்பு படுத்தியதே அதன் மீதான நம்பிக்கை இன்மைக்கான காரணம் ஒரு சாதாரண செடி தனக்கு தேவையான் உணவை தானே தயாரித்துக்கொள்கிறது. எங்கே வைத்தாலும் சூரியனை நோக்கி செல்லும் தேவையும்,புரிதலும் அவைக்கு உண்டு. இதுதான் ஒவ்வொரு உயிர் குழுமத்திற்கும் இயற்கை செய்து வைத்திருக்கும் network system. வண்ணத்துபூச்சி கோடி ரூபாய் தந்தாலும் மலம் உண்ணாது. பன்றிக்கு 100 கோடி ருபாய் தந்தாலும் தேன் பருகாது. இது அவற்றின் network. இவ்வளவு ஏன் 1000 ரூ.கொடுத்து ஒரு செல்போன் வாங்கி, 100 ரூக்கு கிடைக்கும் ஒரு சாதாரண சிம் கார்ட் நம்மை ஒரு network உடன் இணைக்கும்போது..காந்த மயமான மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் network பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள். மற்ற உயிரினம் போல நமக்கு network வரையறைக்குள் கட்டுப்படுத்தப்படவில்லை.நாம் நம்மை tune செய்ய..செய்ய..நம் ஆற்றலின் அலைநீளம் அதிகரித்துக்கொண்டே போகும் என்பதில் ஐயமே வேண்டாம் எல்லொரையும் போன்றவர்தான் ப்ரூஸ்லீ, ஆனால் அவருடைய கைகள் மட்டும் எப்படி ஓரெ அடியில் கல்லையும், மரத்தையும் பிளந்தன..? காரணம் பயிற்சி. அவரைப்போல பயிற்சி செய்த எல்லோருமே இன்று கல்லை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நீங்களும் பயிற்சி செய்தால் உடைக்க முடியும்.பயிற்சி செய்தால் யாராக இருந்தாலும் ஆற்றல் வரும்..சந்தேகமே வேண்டாம். அடுத்து -ஆற்றலை அதிகமாக்கிகொள்வது தீமையா ..? அது உங்கள் ஆற்றலை எந்த நோக்கத்திற்காக செலவு செய்யப்போகிறீர்கள் என்பதை பொறுத்து இருக்கிறது. ஓடுகளத்தில் 120 மைல் வேகத்தில் காரை செலுத்தினால் வெற்றி. பொது சாலையில் ஓட்டினால் தண்டனை. இது நிஜம்தானே..?. நியூட்டனின் விதி நிச்சயமாய் பொருந்தும். பெரிய உதாரணமெல்லாம் தேவை இல்லை. கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு மாலைபோட்டுக்கொள்ளும் நம் சாமிகளை உற்று பாருங்கள். அந்த 48 நாட்களுக்கு அனுஷ்டிக்கும் விரதமென்ன, கோபவார்த்தைகள் கிடையாது, மது,மாமிசம்,மாது கிடையாது. வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் தெய்வாம்சமாய் பாவித்து காலில் விழும் தன்மை என்ன,,,?48 நாட்களுக்கு பிறகு இந்த உணர்வுகள் என்னாகிறது. மாலயை கழற்றியதும்- பட்டை லவங்க மசாலா- டாஸ்மாக்..இதுதானே. நினைத்தால் அந்த தவ தன்மையை ஆயுளுக்கும் தொடர முடியாதா..? முடியும்..?மனம் தேவை இல்லை என நினைக்கிறது. அதனால் தலை உச்சியில் கவனமாய் உட்கார்ந்துகொண்டு..விழிப்பாய் இருந்த் மனம்.., தன் நிலையில் இருந்து இறங்கிவிடுகிறது. "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.."என பாடுவதற்கும், "நிலாகாயுது நேரம் நல்ல நேரம்.."என பாடுவதற்கும் ஆற்றல் நிலையில் வித்தியாசம் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறதா..? நிச்சயமாக நம் ஆற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முடியும் தவா.நம் மனம் ஒரு opaerating system என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அதுவும் சாதாரண os கிடையாது. MS நிறுவனம் ஒவ்வொரு மொழிக்கும் தனிதனியே OS தயாரிக்க வேண்டும். நம் மனித OS அப்படியானதல்ல. ஒரு வயதாகும்போது உங்களுக்கு மொழி தெரியாது. ஆனால் இன்று குறைந்தது இரண்டு மொழி உங்களால் பேச முடியும். இன்னும் நினைத்து பயிற்சி எடுத்தால், உலக மொழிகள் அனைத்தையும் கற்று சாதனை செய்யப்போகிறேன் என தீர்மானித்தால் அத்தனை மொழிகளையும் கற்க உங்களுக்கு தடை எதுவுமே இல்லை. நம் OS ஐ வேலை வாகுவதில் இருக்கிறது நம் ஆற்றல். சுவாமி.விவேகானந்தர் சொன்னதுபோல "எல்லா ஆற்றலும் நமக்குள்.."என்பதை நம்புவதால் எந்த கேடும் இல்லை. என்னையும் சிந்திக்கும் வண்ணம் வினாக்கள் தொடுத்த உங்களுக்கு நன்றி தவா. தொடர்ந்து இயலுமானால் கட்டுரைகளை வாசியுங்கள்.கூட்டு பகிர்வாய் தீர்த்துக்கொள்வோம் நம் ஐயங்களை. > --தமிழன்புடன்.வெங்கட்.தாயுமானவன்.
என் படைப்புகளோடு கைகுலுக்க சொடுக்கவும்http://www.kvthaayumaanavan.blogspot.com/

0 Comments: